1687. | ‘ “அறுத்தாய் கணையால் எனவே, அடியேன்தன்னை, ஐயா! கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன், மறுத் தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்; பொறுத்தே அருள்வாய்!” என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். |
‘ஐயா! - ஐயனே; கணையால் அறுத்தாய் எனவே - (என் மகனை) அம்பால்எய்து அழித்தாய் என்று; அடியேன் தன்னை - அடியேனை; கறுத்தே அருளாய் -கோபித்து விடாமல் இருப்பாயாக; மறுத்தான் இல்லான் - களங்கம் சிறிதும் இல்லாதவனாயநின்மகன்; வனம் மொண்டிடும் ஓதையின் - நீரை முகக்கின்ற ஓசையினால்; எய்தது அலால் - அம்பு எய்தது அல்லாமல்; யானோ கண்ணில் கண்டேன் அல்லேன் - யான்கண்ணால் பார்த்து (அம்பு எய்தேன் அல்லேன்); பொறுத்து அருள்வாய்’ - (இந்த எனதுபிழையைப்) பொறுத்தருள்வாயாக; என்னா - என்று; இரு தாள் - (அம்முனிவனது) இரு திருவடிகளையும்; சென்னி புனைந்தேன் - (விழுந்து வணங்கி) என் தலைமேல் சூடிக்கொண்டேன். கறுத்தல்- கோபித்தல். “கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள்” (தொல். சொல்.372.) என்பது காண்க. அருளுதல் துணைவினை. கறுத்தருளாய் என ஒன்றாக்குக. பெரியோர் செயலைச்சொல்லும் இடத்து ‘அருளாய் ’ எனும் சொல் வரும். அருளாய் என்பதில் ஆகாரம் எதிர்மறை. 82 |