1689. | ‘என்று என்று அயரும் தவரை, இரு தாள் வணங்கி, “ யானே இன்று உம் புதல்வன்; இனி, நீர் ஏவும் பணி செய்திடுவேன்; ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்” என்றிடலும், “வண் திண் சிலையாய் கேண்மோ” எனவே, ஒரு சொல் வகுத்தான்: |
‘என்று என்று - இவ்வாறு பலபடியாகப் புலம்பி; அயரும் - சோர்வடைகிற; தவரை - முனிவரை; இருதாள் வணங்கி - திருவடிகளில் வணங்கி; யானே இன்றுஉம் புதல்வன் - நான் இன்று முதல் உங்கள் மகன் ஆவேன்; இனி நீர் ஏவும்பணிசெய்திடுவேன் - இனி மேல் நீங்கள் இடும் கட்டளையைச் செய்து முடிப்பேன்; ஒன்றும்தளர்வுற்று அயரீர் - சிறிதும் சோர்வடையாதீர்; இடர் ஒழிமின்’- துன்பம்நீங்குங்கள்; என்றிடலும் - என்று சொல்லவும்; ‘வன் திண் சிலையாய்! -வலிய கட்டமைந்த வில்லை உடையவனே; கேண்மோ’ - கேட்பாயாக; எனவே - என்று; ஒரு சொல் வகுத்தான் - (அம்முனிவன்) ஒரு வார்த்தை சொன்னான். ‘யானே’ ‘ஏ’ காரம் தேற்றம். ஒழிமின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று. ‘கேண்மோ’ -‘மோ’ முன்னிலை அசைச்சொல். காமம் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந்.2) என்புழிப் போல. 84 |