1698. | புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப, மண் உற்று அயர்ந்து மறுகிற்று, உடம்பு எல்லாம்,; கண் உற்ற வாரி கடல் உற்றது; அந் நிலையே, விண் உற்றது, எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை. |
உடம்பு எல்லாம் -மக்கள் உடல்கள் எல்லாம்; புண் உற்ற தீயின்- புண்ணில் பட்ட நெருப்புப் போல; புகை உற்று - அனல் மூச்சு விட்டு; உயிர் பதைப்ப- உயிர் துடிதுடிக்க; மண் உற்று - நிலத்தில் பொருந்தி; அயர்ந்து -சோர்ந்து; மறுகிற்று - சுழன்று புரண்டது; கண் உற்ற வாரி - கண்ணிலிருந்து வந்தநீர்ப்பெருக்கு; கடல் உற்றது - கடலாகப் பெருகியது; எம் மருங்கும் - எப்பக்கத்திருந்தும்; விட்டு அழுத பேரோசை - (எல்லோரும்) வாய்விட்டு அழுத குரல் ஒலி;விண் உற்றது - வானத்தை அடைந்தது. ‘உடம்பு எல்லாம் மறுகிற்று’ ஒருமை பன்மை மயக்கம். தொகுதி ஒருமை எனக் கூறி வழாநிலைஎனலும் ஆம். கண்ணீர்ப் பெருக்கு கடலைச் சென்று அடைந்தது எனலும்ஆம். 93 |