1706. ‘‘மண் செய்த பாவம் உளது’
     என்பார்; ‘மா மலர்மேல்
பெண் செய்த பாவம் அதனின்
     பெரிது ’ என்பார்;
‘புண் செய்த நெஞ்சை, விதி’
     என்பார்; ‘ பூதலத்தோர்
கண் செய்த பாவம்
     கடலின் பெரிது ’ என்பார்.

     (நகரமாந்தர) ‘மண்செய்தபாவம் உளது’ என்பார் -  ‘நிலமகள்
செய்த தீவினை மிகுதியாக உள்ளது’  என்பர்; ‘மாமலர் மேல் பெண்
செய்த பாவம் அதனின் பெரிது’
- சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும்
திருமகள் செய்த தீவினை அதைக்காட்டிலும் மிகுதி; ’என்பார்-; ‘புண்
செய்த நெஞ்சை விதி
- புண்பட்ட மனத்தைப் பார்த்து  இது  விதியால்
விளைந்தது;’  என்பார்- ;  பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலின்
பெரிது’
- இப்பூமியில்  உள்ளவர்களின் கண் செய்த தீவினை
கடலைக்காட்டிலும்  மிகுதி;’  என்பார்- .

     இராமனால் ஆளப்பெறாமையால்  பூமியும்,  அனுபவிக்கப்
பெறாமையால் செல்வமகளும் பாவம்  செய்தவர் ஆயினர்.  மணி முடி
தரித்துச் செல்லும் காட்சியைக் காணவேண்டிய கண்கள் மரவுரி தரித்துக்
காடு செல்லும் காட்சியைக் காண நேரிட்டமையின் கண் செய்த பாவம்
மிகுதியாம்.                                                  101