1715.உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்,
“செந்தாமரைத் தடங் கண் செல்வி அருள் நோக்கம்
அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ!’ என்பார்.

     ‘உந்தாது - தூண்டப்படாமல்; நெய்வார்த்து உதவாது - நெய்ஊற்றி
உதவிசெய்யாமல்; கால் எறிய - காற்று வீசுதலால்;  நந்தா விளக்கின் -
(நடுங்குகின்ற) கெடாத விளக்குப் போல; நடுங்குகின்ற நங்கைமார் -
துடிக்கின்றமகளிர்; ‘செந்தாமரைத் தடங்கண் - (இராமரை) செந்தாமரை
மலர் போன்ற விசாலமானகண்களாற் பெறும்; செல்வி அருள் நோக்கம்-
தக்க பருவத்தே விளையும் அருள்பார்வையை; பிரிதுமோ? - பிரியப்
போகிறோமோ; அந்தோ! ஆ! விதியே!  ஓ!’என்பார் -.

     நந்தா விளக்காயினும் தூண்டுதல், நெய்வார்த்தல் முதலிய
உதவியில்லை மாறாகக் காற்று எறிகிறது;  எனவே அணையாமலும்
இருக்கிறது, நடுங்கவும் எப்போது அணையுமோ என்பது போல் உள்ளது.
மகளிர் உயிர்விடவும் செய்யாது வாழவும் இயலாமல் அவலத்தில்
துடிக்கின்றனர் என்பதாம். ‘அந்தோ! ஆ! ஓ’ என்பன இரக்கக்
குறிப்புகள்.                                                   110