1719. | சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து, வில் தாங்கி, வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கி, பற்று ஆர்ந்த செம் பொன் கவசம், பனி மேரு ஆங்கு ஓர் புற்று ஆம் என ஓங்கிய தோளொடு, மார்பு போர்க்க. |
சுற்று ஆர்ந்த கச்சில்- இடையைச் சுற்றி அமைந்த இடைக்கச்சிலே; கரிகை -வாளை; புடை தோன்ற ஆர்த்து - வெளியில் தெரியும்படி கட்டி; வில் தாங்கி -வில்லைச் சுமந்து; வாளிப் பெரும்புட்டில் புறத்து வீக்கி - அம்புகள் அமைந்த பெரியதூணியை முதுகுப்புறத்தில் கட்டியமைத்து; பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் - நன்றாகப்பிடிப்புப் பொருந்திய செம்பொன்னாலாகிய கவசம்; பனிமேரு ஆங்கு ஓர் புற்று ஆம் என -குளிர்ந்த மேரு மலை ஒரு புற்று ஆகும் என்று சொல்லும்படி; ஓங்கிய தோளொடு -உயர்ந்துள்ள தோளோடு; மார்பு போர்க்க - மார்பையும் மூடிக்கொள்ள. இடுப்பைச் சுற்றியுள்ள கச்சில் வாளைச் செருகுதல் இயல்பு. தோளின் பெருமை நோக்கமேருமலை ஒரு புற்றுப் போலத் தோன்றும் என்றார். 114 |