இலக்குவன் உரை 1728. | ‘மெய்யைச் சிதைவித்து, நின்மேல் முறை நீத்த நெஞ்சம் மையின் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல் செய்யக் கருதி, தடை செய்குநர் தேவரேனும், துய்யைச் சுடு வெங் கனலின் சுடுவான் துணிந்தேன். |
‘மெய்யைச் சிதைவித்து - சத்தியத்தை அழியச் செய்து; நின்மேல் முறை- உன்னுடைய சிறப்பான அரசு முறைமையை; நீத்த- நீக்கின; நெஞ்சம் மையின்கரியாள் எதிர் - மனத்தால் மை போலக் கரியவளான கைகேயியின் எதிரே; நின்னை- உன்னை; அம் மௌலி சூட்டல் செய்யக் கருதி - அந்த மகுடத்தை அணிந்து கொள்ளுதல்செய்ய நினைத்து; தடை செய்குநர் தேவரேனும் -தடை செய்பவர்கள் தேவராயினும்; துய்யைச் சுடு - பஞ்சை எரிக்கின்ற; வெங்கனலின்-கொடு நெருப்புப் போல; சுடுவான் - எரித்திட; துணிந்தேன்- உறுதிசெய்தேன்.’ ‘நின் மேல் முறை’ - ‘உன் மேல் உள்ள மகன் என்கின்ற அன்பு முறைமையை’ என்றும்பொருள் உரைக்கலாம் - இது காறும் கைகேயியின் அன்பு மகன் என இராமன் வளர்ந்ததை அவனும்அறிவான் ஆதலின். ‘இமையோரை முனிந்திலாதாய்’ இன்று முனிவானேன் என்ற இராமன் வினாவிற்கு; தடை செய்குநர் தேவரேனும்’ என்பது இலக்குவன் உரைத்த பதில் எனக்கொள்ளின்; ‘இமையோரை’ என்னும் பாடம் வன்மை பெற இதுவும் ஒரு சான்றாகும். 123 |