இராமன் வெறுப்புரை  

1741.‘நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை
     நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு
     அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு
     யாது உளது ஊற்றம்?’ என்றான் -
தேன்சொல் கடந்தான்,
     வடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான்.

     தென்சொல் கடந்தான் - தமிழ் மொழியின் எல்லை கண்டவனாம்;
வடசொல்கலைக்கு எல்லை தேர்ந்தான் - வடமொழிச் சாத்திரங்களின்
முடிவிடத்தை ஆராய்ந்து அறிந்தவனும் ஆகிய இராமன் (இலக்குணனை
நோக்கி); ‘நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும்வளர்த்த தாதை
தன்
- இன் மொழிகள் பேசி என்னைப் பாதுகாத்து  என்னை நாளும்
வளர்த்துவந்த தந்தை தயரதனது; சொல் கடந்து - சொற்களை மீறி; அரசு
ஆள்வது
- அரசு ஆட்சி  செய்வது  என்பது;  எற்கு - எனக்கு;  தக்கது
அன்று
- தகுதியானசெயல் அன்று; (ஆனால் உனக்கோ) என் சொல்
கடந்தால்
- (நீ தந்தையும் தாயும் என்றகருதும் ) என்னுடைய சொல்லை
மீறினால்; யாது உளது ஊற்றம்?’ -  என்ன நன்மைவந்துவிடும் (ஒன்றும்
வராது); என்றான் -

     ‘என்னைத் தந்தையும்  தாயும்  என்று  நீ கருதுவது உண்மையாயின்
என் சொல்லை மீறுவது  உனக்கும் தகாது’ என்று கூறுவதாகக் கருத்துக்
கொள்ளல் வேண்டும். ‘ஆல்’அசை.                             136