இராமன் வெறுப்புரை 1741. | ‘நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்; என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஊற்றம்?’ என்றான் - தேன்சொல் கடந்தான், வடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான். |
தென்சொல் கடந்தான் - தமிழ் மொழியின் எல்லை கண்டவனாம்; வடசொல்கலைக்கு எல்லை தேர்ந்தான் - வடமொழிச் சாத்திரங்களின் முடிவிடத்தை ஆராய்ந்து அறிந்தவனும் ஆகிய இராமன் (இலக்குணனை நோக்கி); ‘நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும்வளர்த்த தாதை தன் - இன் மொழிகள் பேசி என்னைப் பாதுகாத்து என்னை நாளும் வளர்த்துவந்த தந்தை தயரதனது; சொல் கடந்து - சொற்களை மீறி; அரசு ஆள்வது- அரசு ஆட்சி செய்வது என்பது; எற்கு - எனக்கு; தக்கது அன்று - தகுதியானசெயல் அன்று; (ஆனால் உனக்கோ) என் சொல் கடந்தால் - (நீ தந்தையும் தாயும் என்றகருதும் ) என்னுடைய சொல்லை மீறினால்; யாது உளது ஊற்றம்?’ - என்ன நன்மைவந்துவிடும் (ஒன்றும் வராது); என்றான் - ‘என்னைத் தந்தையும் தாயும் என்று நீ கருதுவது உண்மையாயின் என் சொல்லை மீறுவது உனக்கும் தகாது’ என்று கூறுவதாகக் கருத்துக் கொள்ளல் வேண்டும். ‘ஆல்’அசை. 136 |