1750.அன்னான், அவர் தந்தன,
     ஆதரத்தோடும் ஏந்தி,
இன்னா இடர் தீர்ந்து, “உடன்
     ஏகு” என, எம்பிராட்டி
சொன்னால், அதுவே துணை ஆம்’
     என, தூய நங்கை
பொன் ஆர் அடிமேல் பணிந்தான்;
     அவளும் புகன்றாள்;

     அன்னான் - அந்த இலக்குவன்;  அவர் தந்தன - அவ் ஏவல்
மகளிர் கொடுத்தனவாகிய மரவுரியை; ஆதரத்தோடும் ஏந்தி - அன்போடு
பெற்றுக்கொண்டு ;  ‘இன்னா இடர் தீர்ந்து - துன்பத் துயரம் நீங்கி;
உடன் ஏகு’  என - இலக்குவ! இராமனுடன் நீயும் துணையாக வனம்
செல்க என்று; எம்பிராட்டி சொன்னால் - என் தாய்சுமித்திரை
சொல்வாளாயின்;  அதுவே துணை ஆம்’ - அதுவே எனக்குப் பற்றுக்
கோடாகஆகும்;  என - என்று  நினைத்து;  ***தூய மனம்  உடைய
சுமித்திரையின்;  பொன் ஆர்அடி மேல் - பொன் போலப் பொலிந்த
பாதத்தின் மேல்;  பணிந்தான் -வணங்கினான்; அவளும்  புகன்றாள் -
அவளும் சில சொற்கள் கொன்னாள்;

     தாயின் உத்தரவு பெற்று இராமனுடன் செல்லும் ஆசையால் அவள்
வாயாலேயே முதலில் அச்சொல்வரவேண்டும் என எதிர்பார்த்துப்
பணிகிறான் இலக்குவன்.  மரவுரிமை ஏற்ற இலக்குவன்குறிப்பறிந்து தாயும்
அவனைப் பார்த்துச்  சொன்னாள்.                              145