சுமித்திரை இலக்குவனுக்கு அறிவுரை கூறல் 1751. | ‘ஆகாதது அன்றால் உனக்கு - அவ் மனம் இவ் அயோத்தி; மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை - என்றே ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள். |
(இராமனுக்கு ஆகிய) அவ்வனம் - அந்தக் காடு; உனக்கு ஆகாதது அன்றால் -நீ செல்லுதற்குத் தகாதது அன்று; இவ் அயோத்தி - இந்த அயோத்தி மாநகர் போன்றதேஆகும்; மா காதல் இராமன் நம் மன்னவன் - சிறந்த அன்பினை உடைய இராமனே (உனக்குஇனி) நம் மன்னனாகிய தயரதன் ஆம்; நம் பூங்குழல் சீதை - நம்முடைய பூக்கள் அணிந்தகூந்தலை உடைய சீதையே; வையம் ஈந்தும் - இராமன் பூமியைப் பரதனுக்குக் கொடுத்துக்காடு செல்லத் துணிந்த பின்னும்; போகா உயிர்த் தாயர் - போகாத உயிரையுடையதாய்மார்கள் ஆவர்; என்று - எனக் கருதி; ஏகாய் - வனத்திற்கு இராமனுடன்செல்வாயாக; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்’ - இனிமேல் இங்கே நீ நின்றுதாமதிப்பதும் குற்றமாகும்; என்றாள் - ‘இராமன் இருக்கும் இடம் அயோத்தி’ என்னும் உலக வழக்கையே சுமித்திரை மகனுக்குக்கூறினாள். இராமனையும் சீதையையும் தந்தை தாயாகவும், வனத்தை அயோத்தியாகவும் கருதி இங்குள்ளது போலவே வனத்தில்இரு என்றாளாம். ‘என்றே’ ‘ஏ’ காரம் தேற்றம். 146 |