சுமித்திரை இலக்குவனுக்கு அறிவுரை கூறல்  

1751.‘ஆகாதது அன்றால் உனக்கு -
     அவ் மனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம்
     மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம்
     பூங் குழல் சீதை - என்றே
ஏகாய்; இனி, இவ் வயின்
     நிற்றலும் ஏதம்’ என்றாள்.

     (இராமனுக்கு ஆகிய) அவ்வனம் - அந்தக் காடு; உனக்கு ஆகாதது
அன்றால்
-நீ செல்லுதற்குத் தகாதது  அன்று;  இவ் அயோத்தி - இந்த
அயோத்தி மாநகர் போன்றதேஆகும்; மா காதல் இராமன் நம்
மன்னவன்
- சிறந்த அன்பினை உடைய இராமனே (உனக்குஇனி) நம்
மன்னனாகிய தயரதன் ஆம்;  நம் பூங்குழல் சீதை - நம்முடைய பூக்கள்
அணிந்தகூந்தலை உடைய சீதையே; வையம் ஈந்தும் - இராமன் பூமியைப்
பரதனுக்குக் கொடுத்துக்காடு செல்லத் துணிந்த பின்னும்; போகா உயிர்த்
தாயர்
- போகாத  உயிரையுடையதாய்மார்கள் ஆவர்;  என்று - எனக்
கருதி; ஏகாய் - வனத்திற்கு  இராமனுடன்செல்வாயாக; இனி இவ்வயின்
நிற்றலும் ஏதம்’
- இனிமேல்  இங்கே நீ நின்றுதாமதிப்பதும் குற்றமாகும்;
என்றாள் -

     ‘இராமன் இருக்கும் இடம் அயோத்தி’  என்னும்  உலக வழக்கையே
சுமித்திரை மகனுக்குக்கூறினாள்.  இராமனையும் சீதையையும்  தந்தை
தாயாகவும்,  வனத்தை அயோத்தியாகவும்  கருதி இங்குள்ளது  போலவே
வனத்தில்இரு என்றாளாம். ‘என்றே’  ‘ஏ’ காரம் தேற்றம்.           146