இலக்குவனைப் பெற்றோருடன் இருக்க இராமன் கூறுதல் 1754. | தான் புனை சீரையைத் தம்பி சாத்திட, தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்; ‘வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ யான் புகல் இனையது ஓர் உறுதி கேள்’ எனா, |
தான்புனை சீரையை - (இராமன்) தான் அணிந்துள்ளது போன்ற மரவுரியை; தம்பி சாத்திட - தம்பியாகியஇலக்குவனும் அணிந்துகொள்ள; தேன் புனை தெரியலான்செய்கை நோக்கினான்- தேன் நிறைந்த மாலை அணிந்த இலக்குவனின் செயலை இராமன் பார்த்து;‘வான்புனை இசையினாய்! - தேவருலகம் புகழும் புகழினை உடையாய்; நீ மறுக்கிலாது - நீ மறுக்காமல்; யான் புகழ்- நான் சொல்லுகின்ற; இனையது ஓர் உறுதி - இத்தகைய ஒரு நல்லசொல்லை; கேள்’- கேட்பாயாக; ’ எனா - என்று சொல்லி. புனை சீரை என்றாரேனும் புனைந்தது போலும் சீரை என்றுபொருள் கொள்க. ‘தம்பியும் சாத்திட’ என்ற எச்சவும்மை வருவித்துரைக்கப்பட்டது. தெரியலான் செய்கை - இலக்குவன் செயல். பார்த்து; முற்றெச்சம் இலக்குவன் செய்ததைப்பார்த்து இராமன் ஒரு கருத்தைக் கூறலானான். 149 |