இலக்குவன் பதில் 1756. | ஆண்தகை அம் மொழி பகர, அன்பனும், தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா, மீண்டது ஒர் உயிர் இடை விம்ம விம்முவான், ‘ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?’ என்றான், |
ஆண் தகை அம்மொழி பகர - ஆடவருள் சிறந்தோனாகிய இராமன் அந்த வார்த்தைசொல்ல; அன்பனும் -இலக்குவனும்; தூண்தரு திரள் புயம்-தூணுக்கு ஒப்பாகியதிரண்ட தோள்; துளங்க- நடுங்கும்படி; துண் எனா - திடுக்கென்று அஞ்சி; மீண்டது ஒர் உயிர் இடைவிம்ம விம்முவான் - திரும்பிவந்ததாகிய ஓர் உயிர் இடையில் மீண்டும் கலங்குமாறு துடிப்பவனாய் (இராமனை நோக்கி); ‘உனக்கு-; அடியனேன் - யான்; ஈண்டுப் பிழைத்தது யாது?’-இங்கே செய்த தவறு என்ன; என்றான் - இராமனுடன் சீரை சாத்திய போது உயிர் திரும்பியது இலக்குவனுக்கு. இப்போதுஅயோத்தியில் பெற்றோர்க்கு உதவியாக இரு என்று இராமன் தனன்னோடு வராதபடி தடுத்தபோது இடையே இருப்பதா. போவதா என்று துடிக்கிறது எனக் கொள்க. 151 |