இராமன் வசிட்டனுக்கு உரைத்த மறுமொழி  

1767.‘அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன்; அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன்; இது நெறியும்’ என்றனன் -
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான்.

     பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான் - ஆதிசேடனாகிய
படுக்கையில் அறிதுயில்செய்தல் நீங்கி அயோத்தி வந்த இராமன்
(முனிவனை நோக்கி);  ‘அன்னவன் -தயரதனது;  பணி தலை ஏந்தி
ஆற்றுதல்  என்னது  கடன்
- கட்டளையைச் சிரமேற் கொண்டுசெய்தல்
எனது கடமையாகும்;  அவன் இடரை நீக்குதல் நின்னது  கடன் -
அத்தயரதனது துன்பத்தைப் போக்கி ஆற்றுவித்தல் உனது  கடமையாகும்;
இது  நெறியும்’ - இது நீதியும்ஆகும்;’  என்றனன் -.

     அவதார நோக்கம் கானகம் செல்வது, அதற்காகவே வந்தவன்
என்பதை அறிவிக்க, ‘பன்னகப்பாயலின் பள்ளி நீங்கினான்’ என்றார்.   162