1773. | தம்மையும் உணர்ந்திலர் - தணிப்பு இல் அன்பினால் அம்மையின் இரு வினை அகற்றவோ? அன்றேல், விம்மிய பேர் உயிர் மீண்டிலாமைகொல்?- செம்மல்தன் தாதையின் சிலவர் முந்தினார். |
சிலவர்த - சிலர்; தணிப்பு இல் அன்பினால் - அடக்க முடியாத அன்பால்;தம்மையும் உணர்ந்திலர் - தம் நிலையையும் அறியாதவர் கள் ஆயினராய்; செம்மல்தன் தாதையின் - இராமபிரானது தந்தையாகிய அயரதனைவிட ; முந்தினார் -முற்பட்டு இறந்து விண் சென்றனர்; அம்மையின் - வருகின்ற பிறப்பில்; இருவினைஅறுக்கவோ? - இருவினைகளையும் இல்லாமல் நீக்கிக்கொள்ளவா; அன்றேல் - அப்படி இல்லாமற்போனால்; விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை கொல் - பிரிவினால் துடித்தஅரிய உயிர் வெளிப் போனது திரும்ப மீளாமையாலோ. சென்ற உயிர் இனித் திரும்பாமல் மீளா உலகம் சேர்ந்ததுஆகலின், ‘இரு வினை அகற்றவோ’ என்றார். இருவினை அற்றவர் மீளா உலகம் சேர்வர்ஆதலின். 168 |