அரசன் தேவியர் துயரம்  

1779.அறுபதினாயிரர் அரசன் தேவியர்,
மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர்,
சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்;
எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார்.

     மறு அறு கற்பினர் - குற்றமற்ற கற்பினை உடைய; அறுபதினாயிரர்
அரசன்தேவியர்
- அறுபதினாயிரம் பேராகிய தசரதனுடைய மனைவியர்;
மழைக் கண் நீரினர் - மழை போன்ற கண்ணீரை  உடையவராய்; 
சிறுவனைத் தொடர்ந்தனர் - இராமனைப் பின்தொடர்ந்து;  திறந்த
வாயினர்
- வாய் திறந்து;  எறி திரைக்கடல் என இரங்கிஏங்கினார் -
அலை வீசும் கடல் போல அழுது  வருந்தினார்கள்.

     இவர் உரிமை மகளிர் ஆவர். பரசுராமனிடம்  இருந்து  தன்னைக்
காத்துக் கொள்ள ஒவ்வொருஆண்டும் மணக் கோலத்துடன் இருக்க
வேண்டிய; தயரதன் அறுபதினாயிரம் மகளிரை அறுபதினாயிரம்
ஆண்டுகளில் மணந்தான் என்று ஒரு கதை உண்டு. இதுவே வான்மீகத்தில்
முந்நூற்றைம்பதின்மர் எனப்பேசப்பெற்றுள்ளது.  மூவரே பட்டத்தரசியர்
ஆவர்.                                                     174