1781. | கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன, அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால், தொளை படு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன - இளையவர் அழுதினும் இனிய சொற்களே. |
இளையவர் அமுதினும் இனிய சொற்கள்- இளைய அத்தேவியரின் அமுதத்தைக் காட்டிலும்இனிமையான சொற்கள்; அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் -அளவில்லாமல் பெருமூச்சு விட்டு அழுகின்ற காரணத்தால்; கிளையினும் நரம்பினும் நிரம்பும்கேழன - மூங்கிலாலும், நரம்பாலும் செய்யப் பெற்றனவாகிய; தொளைபடு குழலினோடுயாழ்க்குத் தோற்றன - உள்தொளை உடைய புல்லாங்குழலோடு யாழிசைக்குத் தற்போது தோற்றுப்போயின. கிளை - மூங்கில். ஆகுபெயராய்ப் புல்லாங்குழலின் இசையைக் குறித்தது. நரம்பும்அவ்வாறே யாழிசையைக் குறித்தது. கேழன - சுவை உடையன முன்பு அம்மகளிர் குரல் ஒலி குழலையும்யாழையும் வென்றது. இப்போது அமுது அரற்றிய காரணத்தால் தோற்றது என்பதாம். 176 |