1794.‘முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை,
மழுக்களின் பிளத்தும்’ என்று, ஓடுவார்; வழி
ஒழுங்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து, இடர் உற்றார் - சிலர்

     சிலர் -;  “முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை - பெரிய
கல்லைப் போலவலியதாக உள்ள நமது  கடு மனத்தை;  மழுக்களின்
பிளத்தும்’
- கோடரியால்இரண்டாக்குவோம்;’  என்று  ;  ஓடுவார் -
ஓடுகின்றார்கள்;  வழி ஒழுக்கியகண்ணின் நீர்க் கலுழி ஆற்றிடை -
வழியில் ஒழுகவிடப்பட்ட கண்ணீராகிய கலங்கியநீர்ப்பெருக்காகிய
ஆற்றின்கண்;  இழுக்கலில் - சேற்றில்;  வழுக்கி  வீழ்ந்து- சறுக்கி
விழுந்து;  இடர் உற்றார் - துன்பம் அடைந்தார்.

     கலின் - கல்லின் என்பதன் விகாரம்.  மழு - கோடரி. ஒடுகின்றவர்
தமது  கண்ணீர் ஆற்றுச் சேற்றில் வழுக்கி,  வீழ்ந்தார்கள் என்பதாம்.
இழுக்கல் - சேறு.  “இழுக்கல்  உடையுழி ஊற்றுக்கோல்’  என்னும் குறள்
காண்க. (குறள். 415.)                                          189