1800. | நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி - தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால், மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும் பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே. |
நல் நெடுங் கண்களின் நான் நீர்த்துளிதன்ற - (மேல்மாடத்திருந்து இராமனைக்கண்ட மகளிர்) நல்ல நீண்ட கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளியினது; நெடுந் தாரைகள்- நீண்ட நீர்ப்பெருக்கு; தளத்தின் வீழ்தலால்- மேல் தளத்திலிருந்து கீழேவிழுகின்ற தன்மையால்; மாடமும்- மாளிகையும்; மன் நெடுங் குமரன் மாட்டு அழுங்கி- அரச குமாரனிடத்தில் வருந்தி; பொன் நெடுங் கண் குழித்து - அழகிய பெரிய இடத்தைக் குழி செய்து; அழுவ போன்றவே - அழுகின்றன போல்வன. மேல் மாடியிலிருந்து காணும் மகளிர் கண்ணீர்த் தாரை மாடித் தளத்திலிருந்து கீழே விழும் காட்சி மாளிகையே அழுவதுபோல் என்பது தற்குறிப் பேற்றயிணயாம்- கண் - இடம் (விழி) சிலேடை. 195 |