நகரின் பொலிவு அழிதல் 1804. | கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்; படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால், பொடி அடங்கின, மதில் புறத்து வீதியே., |
மனைக்குன்றம்- மனைகளாகிய மலைகளில்; கொடி அடங்கின- கொடிகள் அடங்கிப் போயின; கோ முரசு-அரச முரசம்; இடி அடங்கின- ஒலித்தல்இல்லாமற் போயின; பல் இயம் -பல வாத்தியங்கள்; முழக்கு இழந்த - ஒலியைஇழந்தன; படி அடங்கலும் -பூமி முழுவதிலும்; மதில்புறத்து வீதி - மதிலின் புறம்பே உள்ளவீதிகள; நிமிர்பசுங்கண் மாரியால் - பெருகுகின்ற கண்ணீர் மழையால்; பொடிஅடங்கின - புழுதிஅடங்கப் பெற்றன. கொடி கட்டப்பெற்ற மாடங்கள் கொடி இன்றி இருத்தல் வாத்தியங்கள் ஒலியாமை முதலியனதுயரச் சின்னங்களாம். அயோத்தியின் துயரத்தை உலகத்தின்மேல் ஏற்றிக் கூறியது உயர்வுநவிற்சியே; ஆயினும், உலகமே வேதனைப் படுதற்குரியநிகழ்ச்சிதானே! 199 |