1811.செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி
நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும்
மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே.

     புனல்- நீரை;  செய்ம்  மறந்தன -வயல்களை மறந்து  விட்டன;
பசுங்குழவி - இளங் குழந்தைகளை;  சிவந்தவாய்ச்சியர் கை - சிவந்த
வாயுடையதாய் மகளிர் கைகள்; மறந்தன்-மறந்து போயின; காந்து எரி-
விளங்கும்வேள்வித் தீ;  நெய்ம் மறந்தன -நெய்யை மறந்து போயின;
நெறி அறிஞர் யாவரும்- சாத்திரம் அறிந்தஞானிகள்
அனைவரும்; 
மெய்-
தத்துவப் பொருளை; மறந்தனர்-மறந்துபோயினர்; வேதம்-,
ஒலி மறந்த- ஒலித்தலை மறந்து போயின.

     வயலுக்கு நீர் பாய்ச்சுவார் இல்லை. குழந்தைகள் பால் உண்ணவில்லை.
வேள்விகள் நடைபெறவில்லை. சாத்திர விசாரணை செய்வாரில்லை.
வேதபாராயணங்கள் நடைபெறவில்லை என்பதாம். ‘ஏ’ காரம் ஈற்றசை.206