கலிவிருத்தம் 1821. | ‘பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ் - மன்னை உற்றது உண்டோ, மற்று இவ் வன் துயர் என்னை உற்றது? இயம்பு’ என்று இயம்பினாள் - மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள். |
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் - மின்னலை ஒத்த நடுங்குகின்ற உடம்பினைஉடையளாகிய சீதை; ‘பொன்னை உற்ற பொலங்கழலோய்! - பொன்னால் செய்த பொலிவானவீரக்கழலை அணிந்தவனே; புகழ் மன்னை - கீர்த்தி உடைய சக்கரவர்த்தியை; உற்றது உண்டோ? - நேரிட்ட துன்பம் ஏதேனும் உளதோ; மற்று - அப்படிஇல்லையாயின்; இவ் வன்துயர் உற்றது என்னை - இக் கொடிய துன்பம் வந்தது எதனால்; இயம்பு - சொல்லுக;' என்று இயம்பினாள் - என்று கேட்டாள். மாமியார் அழுதபடியால் சக்கரவர்த்திக்கு ஏதேனும் தீங்கண்டோ என்று வினாவினாள்.மற்று, வினைமாற்று. 216 |