இராமன் ‘இருத்தி’ என்றதன் காரணம்  கூறல்  

1826.‘வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்லல - நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது’ என்றான்.

     (இராமன்) ‘நின் - (சீதையே!)  உனது;  சில் அரக்கு உண்ட -
குளிர்ந்தசெம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற;  சேவடிப் போது - சிவந்த
அடிமலர்கள்;  வல்அரக்கரின் - கொடிய அரக்கர் போலத் (தோன்றும்);
மால் வரை - பெரியமலையில்; போய் விழுந்து - சென்று  பரவி; அல்-
இரவிலும்;  அரக்கின்  உருக்கு அழல் காட்டு அதர் - அரக்கினை
உருக்கினாற்போல வெப்பத்தைச்செய்கின்ற காட்டு வழியில் உள்ள; கல் -
கற்கள்;  அரக்கும் -உராய்கின்ற;  கடுமைய அல்ல’ - கடுமையுடையன
அல்ல;’  என்றான் -.

     மலைவழி,  காட்டுவழி,  இரவிலும் வெப்பம் செய்யும் வழி,  கூரிய
கற்கள் உற்ற வழி எனவேவெப்பமான - கூர்ங்கற்கள் உராய்வதனால்
ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்;
குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம்.
அதனால்தான்.‘இருத்தி’ என்றேனே அன்றி  உன்னைப்  பிரிதல்
வல்லமையால் சொன்னேன் என்று  கருதாதேஎன்பது  போல இராமன்
கூறினான்.                                                   221