1848. குயின்றன குலமணி நதியின் கூலத்தில்,
பயின்று உயர் வாலுகப் பரப்பில், பைம் புலில்,
வயின்தொறும் வயின்தொறும் வைகினர்; ஒன்றும்
அயின்றிலர்; துயின்றிலர்; அழுது விம்மினார்.

     (இராமனுடன் சென்றஅவர்கள்) ஒன்றும் - ஒரு பொருளையும்;
வாய்மடுத்து - வாயில் இட்டு;  அயின்றிலர்- உண்ணவில்லை;

துயின்றிலர்- தூங்கவில்லை;  அழுது  விம்மினார் -அழுது  அழுது
பொருமுகிறவர்களாய்; குலமணி குயின்றன நதியின் கூலத்தில்-
கூட்டமான மணிகள்பதித்துள்ளன போல உள்ள ஆற்றுக் கரைகளில்;
பயின்று உயர் வாலுகப் பரப்பில் - திரண்டுஉயர்ந்த வெண்மணற்
பரப்பில்; பைம்புலில் - பசிய புல்தரையில்; வயின்தொறும்வயின்
தொறும் -
தங்குதற்குரிய  இடங்கள் தோறும்;  வைகினர்-தங்கினர்.

     ‘குயின்று + அன’ செய்தால் ஒத்த என்று பொருள் காண்க. காட்டில்
உள்ள ஆற்றில்மணிகள் பதித்துக் கரை ஒழுங்கு செய்வார் இலராகலின்.
ஆற்றில் அடித்துவரும் மணிக்கற்கள்கரையோரம் அங்கங்கே திரண்டு
பதிந்த காட்சியைப் பதித்துச் செய்தது  போல என்றார் . கூலம் - கரை. 
ஒன்றும் - இழிவு சிறப்பும்மை. ‘புல்லில்’ புலில் - குறை.                 9