1850. | பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின் குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில். அரும்பு அனைய கொங்கை, அயில் அம்பு அனைய உண் கண், கரும்பு அனைய செங்சொல் நவில், கண்ணியர் துயின்றார். |
பெரும் பகல் வருந்தினர் - பெரிய பகற் பொழுதில் வழிநடந்து மிகவும் வருந்திய;தெங்கின் குரும்பைகள் பொரும் - தென்னங் குரும்பைகளைத் தோல்வியுறச் செய்யும்; பிறங்கு முலை - விளங்கிய முலைகளை உடைய; செவிலி மங்கையர் குறங்கில் - தம்மைவளர்க்கும் தாயரது துடையில்; அரும்பு அனைய கொங்கை - தாமரைமலர் அரும்பை ஒத்தமுலையையும்; அயில் அம்பு அனைய உண்கள் - கூரிய அம்பை ஒத்த மை உண்ட கண்ணையும் உடைய; கரும்பு அனைய செஞ்சொல் நவில் - கரும்பைப் போலும் இன்ப செவ்வியசொற்களைப் பேசுகின்ற; கன்னியர் - இள மகளிர்; துயின்றார் - தூங்கினர். செவில் மங்கையர் வயதின் மிக்கோர் என்பதைத் தென்னங் குரும்பை போலும் முலை என்பதனால் அறிவுறுத்தி; அவர் துடையில் துயிலும் கன்னியர் இளவயதினர் என்பதனை அரும்பைஒத்த முலை என்பதனாற் கூறிய திறம் அறிந்து மகிழத் தக்கது. அரும்பு - தாமரை அரும்பு ஆம் ‘பூவெனப்படுவது பொறி வாழ் பூவே’ (நால்வர் நான்மணி. 40) என்பவாதலின் யாண்டும் இன்னமலர் என்னாது மலர் என்றவழி இடம்நோக்கித் தாமரையேசொல்லப்படும். 11 |