1851.பூ அகம் நிறைந்த புளினத் திரள்கள்தோறும்,
மா வகிரின் உண்கணர் மடப் பிடியின் வைக,
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன,
தூ அகல் இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார்.

     அகம் பூ நிறைந்த புளினத் திரள்கள் தோறும் - தம்மிடத்தில்
மலர்கள்நிறைந்துள்ள மணல் மலைகளிடமெல்லாம்;  மா வகிரின்
உண்கணர் மடப்பிடியின் வைக -
பிளந்த மாவடுப் போன்ற மை உண்ட
கண்களை உடைய மகளிர் இளைய பெண் யானையைப் போலத்தூங்கித்
தங்க;  தூ அகல் இல் குந்த மறமைந்தர்கள் - தசை எப்போதும்
அகலாமல்இருக்கப்பெற்ற குந்தப் படையை உடைய வீரமறவ இளைஞர்கள்;
சேவகம் அமைந்த சிறுகண் கரிகள்என்ன - பிடியைப் பாதுகாப்புச்
செய்யும் தொழில் புரிகின்ற சிறிய கண்ணை  உடைய களிற்றியானைகள்
போல; துயின்றார் - துங்கினார்கள்.

     தூ - என்பது தசை. ஊன்தங்கிய குந்தம். சேவகம் - வீரச் செயல்.
‘யானைகட்கும்  கூடம்’என்றும் ஆம். சேவகம் - உறக்கம் என்பதும்  ஒர்
உரை “யானை சேவகம் அமைந்தது  (7280)“தறிபொரு களிநல்யாதனை
சேவகம் கள்ளி”  (8837) என்பன காண்க.  இனிச்  சேவகம்  என்பது 
பாதுகாவல்;
வீரமறத்தொழில் குறித்து வருதலை; ‘வீரச் சேவகச் செய்கை’
(7281) என்ற  பாடற்பகுதியால் அறிக. குந்தம் - ஒரு படைக்கலத்தின்
பெயர். கணர் - கண்ணர் - தொகுத்தல்விகாரம்.                   12