1868. | ‘நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற, மறப் பயன் விளைக்குறும் வன்மை அன்று அரோ; இறப்பினும், திரு எலாம் இழப்ப எய்தினும், துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே. |
‘சூரர்ஆவது - வீரத்திற் சிறந்த சூரர் என்று ஒருவர் சொல்லப் பெறுவது; நிறப் பெரும் படைக்கலம் - ஒளிபடைத்த பெரிய ஆயுதம்; நிறத்தின் நேர் உற -மார்பிடத்து நேரே வந்து பொருந்த; மறப்பயன் வினைக்குறும் வன்மை அன்று -வீரப்பயனை விளைத்துக் காட்டும் வல்லமை அன்று; இறப்பினும் - இறந்தாலும்; திருஎலாம் இழப்ப எய்தினும் -செல்வம் எல்லாம் இழக்கும்படி நேர்ந்தாலும்; அறம் துறப்பிலர்- அறத்தைக்கைவிடாதவர்; எனல்-எனச் சொல்லப் பெறுவதே ஆகும்.’ போரில் படைஏற்பது சூரத்தனம் அன்று. வாழ்வில் அறத்தின் வழி மனம் தளராது நிற்றலே யாரும் என்றார்., ‘சிதைவிடத்து ஒல்கால் உரவோர்’ (குறள். 597.) காண்க. ‘அரோ’ , ‘ஏ’ அசைகள். 29 |