1873. | ‘ “வெவ்வியது, அன்னையால் விளைந்தது, ஈண்டு ஒரு கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன், எவ் அருள் என்வயின் வைத்தது, இன் சொலால், அவ் அருள் அவன்வயின் அருளுக!” என்றியால். |
‘ஈண்டு - இவ்விடத்து; அன்னையால் விளைந்தது - கைகேயியால் உண்டாக்கியது; வெவ்வியது ஒரு கவ்வை - கொடியதாகிய ஒரு துன்பம்; என்று-; இறையும் - சிறிதளவும்; தன் கருத்தின் - (பரதன்) தன்னுடைய மனத்தின்கண்; நோக்கலன் - கருதாதவனாய்; எவ் அருள் என் வயின் வைத்தது- எத்தகையதொரு அருளைஎன்னிடம் (பரதன்) வைத்துள்ளானோ; அவ் அருள் - அத்தகைய அருளை; அவன் வயின் -அந்தத் தயரத மன்னனிடத்தும்; அருளுக’ - காட்டுவானாக; என்றி - என்று சொல்லுவாய்.’ கைகேயிமாட்டும், தயரதன்மாட்டும் என்னிடம் உள்ள அன்பிற்சிறிதும் குறையாது அன்போடு நடந்துகொள்ளுமாறு பரதன்பால் கூறவும் என்றான். “ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால், தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ” என்று பரதன் கூறுவதைஇங்கே கருதுக. (2173.) 34 |