1874. | ‘வேண்டினென் இவ் வரம் என்று, மேலவன் ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி, ஏகினை, பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு, இனிது ஆண் தகை வேந்தனை அவலம் ஆற்றி, பின், |
ஏகினை- (நீ) இங்கிருந்து புறப்பட்டுச் சென்று; பூண்ட மாதவனொடும் - மேற்கொண்ட பெருந்தவத்தை உடைய வசிட்ட முனிவனோடும்; கோயில் புக்கு - அரண்மனைஅடைந்து;ஆண்தகை வேந்தனை - ஆடவருள் சிறந்த தயரதனை; இனிதுஅவலம் ஆற்றி - இனிமையாக மனத்துயரத்தைத் தேற்றி; இவ்வரம்வேண்டினென் என்று - இந்த வரத்தைத்தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு; ஈண்டுஅருள் எம்பிபால் நிறுவி - என்னிடத்து வைத்துள்ள அருளை என்தம்பியாகிய பரதன்பாலும் வைக்க வேண்டும் என்று நிற்குமாறு செய்து;பின் -பிறகு.... அடுத்த செய்யுளில் முடியும் முதலில் வரத்தை வாங்கிக்கொண்டு பின்னர் அவ்வரம் இன்னதுஎன்று கூறித் தம்பிபால் அருளை நிறுவுக என்றது ஒரு நயம். 35 |