1876. | ‘முறைமையால் எற் பயந் தெடுத்த மூவர்க்கும் குறைவு இலா என் நெடு வணக்கம் கூறி, பின் இறைமகன் துயர் துடைத்து இருத்தி, மாடு’ என்றான் - மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான். |
மறைகளைமறைந்து போய் - வேதங்களுக்கு எட்டாமல் மறைந்து நின்று; வனத்துள் வைகுவான் - எடுத்த அவதாரத்திற்கேற்பவனத்தின்கண் வசிப்பவனாகிய இராமன்; என் பயந்து எடுத்த மூவர்க்கும்- என்னைப் பெற்றெடுத்த தாயர்; மூவர்க்கும் -மூன்றுபேர்க்கும்; முறைமையால் - முறைமைப்படி; குறைவு இலா -சிறிதும் குறைவுபடாத;என் நெடு வணக்கம் கூறி - என்னுடைய பெரிய வணக்கத்தைச் சொல்லி; பின்- பிறகு; இறை மகன் துயர் துடைத்து - தயரதனதுதுன்பத்தை நீக்கி; மாடு- அவன் பக்கல்; இருத்தி’- நீங்காது இருப்பாயாக; என்றான் -. அன்னையர்க்குச் சொல்ல வேண்டியதைச் சுமந்திரன்பால் கூறினன். ‘வேதம்.......தெரிகிலாஆதி தேவர்’ (2516). இப்படலத்து26 ஆம் பாடலால் ‘தூய மெய்யுணர்வால் அணுகும் காட்சியான்’என்று சொல்லி, இங்கே ‘மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான்’ என்று முடித்துள்ள அருமைப்பாட்டை அறிந்து நுகர்க. 37 |