188.‘மன்னனே! அவனியை
     மகனுக்கு ஈந்து, நீ
பன்ன அருந்தவம்
     புரி பருவம் ஈது’ என,
கன்ன மூலத்தினில்
     கழற வந்தென,
மின் எனக் கருமை போய்
     வெளுத்தது - ஓர் மயிர்.

     அவனி - பூமி; கன்ன மூலம் - காதின் அடியில், காது அடியில்
தலைமயில்நரைத்தல் முதுமைக்கு அடையாளம் ஆகும்; சுழறல் -
இடித்துரைத்தல்.