இராமன் இளவலை அடக்க, சுமந்திரன் புறப்படுதல்  

1884.ஆரியன் இளவலை நோக்கி, ‘ஐய! நீ
சீரிய அல்லன செப்பல்’ என்றபின்,
பாரிடை வணங்கினன், பதைக்கு நெஞ்சினன்;
தேரிடை வித்தகன் சேறல் மேயினான்.

     ஆரியன்இளவலை நோக்கி - இராமன் இலக்குவனைப்  பார்த்து;
‘ஐய! -ஐயனே;  நீ-; சீரிய அல்லன செப்பல்’ -
சிறந்தனஅல்லாத
சொற்களைச் சொல்லாதே;’ என்றபின் -என்ற பிறகு; தேரிடைவித்தகன்
-
தேர்செலுத்தலில் திறமையாளனாகிய  சுமந்திரன்; பதைக்கும்
நெஞ்சினன் -
துடிக்கும்மனம் உடையனாய்;  பாரிடை வணங்கினன்-
நிலத்தில் விழுந்து வணங்கி; சேறல் மேயினான் -செல்லத்தொடங்கினான்.

     வித்தகன் - திறமை உடையவன்.  இங்குத் தேரோட்டும் திறமையும்,
மந்திரித் தன்மையும்ஆம்.                                       45