189.தீங்கு இழை இராவணன்
     செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
     ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
     படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -
     அவனி காவலன்.

     படிமம் - பிரதிமா என்னும் வடசொல் திரிபு. தன்னுடைய உருவம்.