1928. | அஞ்சு அம்பையும் ஐயன்தனது அலகு அம்பையும் அளவா, நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையாள், துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின்படி சுழலும் கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள். |
அஞ்சு அம்பையும் - மன்மதனது மலர் அம்புகள் ஐந்தனையும்; ஐயன்தனது -இராமனது; அலகு - கூர்மையான; அம்பையும் - கணையையும்; அளவா - அளந்து(தனக்குவமை யாகானென்று தள்ளி); நஞ்சங்களை - கொடிய விடங்களை; வெல ஆகிய -வெல்லும் தன்மை படைத்தனவாகிய; நயனங்களை உடையாள் - அழகிய கண்களை உடைய சீதை;துங்சும் களி வரி வண்டுகள் - உறங்கும் செருக்குடைய அழகிய வண்டுகள்; குழலின்படி -கூந்தலிற் படியும் தன்மையில்; சுழலும் - சுற்றியிருக்கப்பெற்ற; கஞ்சங்களை -தாமரை மலர்களை; மஞ்சன் கழல் - மைந்தனாகிய இராமனது திருவடிகள்; நகுகின்றது -உவமையாகாதென்று இகழ்ந்து சிரிப்பதனை; கண்டாள்-. தாமரை, முல்லை, அசோகு, மா, நீலம், என்பன மன்மதனது மலர் அம்புகளாம். இங்கு மலர்கருதாது அம்பு என்பதுபற்றிக் கூறப்பெற்றது. தேனுண்டு உறங்கும் செருக்குடைய வண்டுகள். குழலின்படி- வேய்ங்குழல் போல ரீங்காரித்து என்றும் நெய்குழல்போல போவது வருவது ஆகி என்றும் ஆம்.இராமனது திருவடி அழகிற்குத் தாமரை ஒப்பாகாமை கருதி மகிழ்ந்தாள் சீதைஎன்றவாறாம். 3 |