1937.எதிர்கொடு ஏத்தினர்; இன் இசை பாடினர்;
வெதிர் கொள் கோலினர், ஆடினர்; வீரனை,
கதிர் கொள் தாமரைக் கண்ணனை, கண்ணினால்,
மதுர வாரி அமுது என, மாந்துவார்.

     வெதிர் கொள் கோலினர்- மூங்கிலால் ஆகிய தண்டத்தை உடைய
முனிவர்கள்; வீரனை - இராமனை; கதிர் கொள் தாமரைக் கண்ணனை-
ஒளி படைத்த தாமரைக்கண்களை உடையவனை; கண்ணினால் - தங்கள்
கண்களால்; மதுர வாரி அமுது என -இனிய பாற்கடல் தந்த அமுதம்
போல;  மாந்துவார் - உண்டு; எதிர் கொடு -வரவேற்று;  ஏத்தினர் -
துதித்து; இன் இசை பாடினர் - இனிய இசை பாடி; ஆடினர் -(ஆனந்தக்
களிப்பால்) ஆடினர்.

     மது ரவாரி - பாற்கடல். வெதிர் - மூங்கில் - ஏக தண்டம்,  திரி
தண்டம் ஏந்துதல்முனிவர் இயல்பு. “முக்கோல் கொள் அந்தணர்” (கலித்.
126:4) என்பது  காண்க.                                         12