1942.கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா,
‘பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர்,
என்னின் நீக்குவர்; யானும், இன்று என் - தந்த
உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான்’ என்றாள்.

     கன்னிநீக்க அருங் கங்கையும் - அழியாத் தன்மை என்றும்
நீங்குதல் இல்லாதகங்கையும்;  கைதொழா - கைகளால் (இராமன்)
வணங்கி;  ‘பாருளோர்- இப் பூமியில் உள்ளோர்;  பன்னி நீக்கஅரும்
பாதகம் -
சொல்லிப் போக்க முடியாத பாவங்களை;  என்னின்- என்
மூலமாக;  (முழுகி) நீக்குவர்- போக்கிக்கொள்வார்கள்; யானும் - நானும்;
இன்று - இன்றைக்கு; என்தந்த உன்னின்-என்னைத் தந்த திருமாலாகிய
உன்னால்;  நீக்கினென் - (என்பாவங்களைப்)போக்கிக் கொண்டேன்;
யான் உய்ந்தனென்’ - நானும் பிழைத்தேன்;’என்றாள்- என்று
சொன்னாள்.

     பிறர் செய்த பாவங்களைப் போக்கும் கங்கை இன்று தன்னைத் தந்த
இறைவனாகிய இராமனேமுழுகியதால் தன் பாவங்களைப் போக்கிக்
கொண்டு மகிழ்ந்தாளாகக்கூறினாள்.                               17