1945. | வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக, பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள். |
பஞ்சின் மெல்லடிப் பாவையும்- செம் பஞ்சு போன்ற மென்மையான பாதங்களை உடையசீதையும்; இடைக்கு வஞ்சி நாண - தன்இடைக்கு வஞ்சிக் கொடி நாணப்பட்டுத்தோற்றொதுங்க; மடநடைக்கு அன்னம் அஞ்சி ஒதுங்க - அழகிய தன் நடைக்கு அன்னப் பறவைதோற்றுப் பயந்து பின்னிட; அடி அன்ன கங்சம் நீரில் ஒளிப்ப - தன் பாதம் போன்ற தாமரை தோற்றுத் தண்ணீரில் மறைந்துகொள்ள; கயல் உக - கயல் மீன்கள் (கண்ணுக்குத்தோற்றுக்) கெட; ஆடினாள் - நீராடினாள். வஞ்சி, அன்னம், தாமரை, கயல் ஆகியவை நீரில் உள்ளவை. நீராடும் சீதையின்உறுப்புநலன் கண்டு அவை தோற்றதாகக் கற்பனை செய்தார். கயல் என்பதனால் கண்ணுக்குத் தோற்றுஎன்பது வருவிக்கப் பெற்றது. 20 |