195.‘கேடு அகல் படியினைக்
     கெடுத்து, கேட இலாத்
தாடகை வலிக்கு ஒரு
     சரம் அன்று ஏவிய
ஆடக வில்லிக்கே
     ஆக, பார்!’ எனாத்
தோடு அவிழ் மலர் முடித்
     துருக்கர் சொல்லினார்.

     படி - பூமி; ஆடக வில்லி - பொன் வில்லை உடைய இராமன்;
ஆடகம்- பொன் வகைகளுள் ஒன்று. ஆடகம், சாம்பூநதம்,  கிளிச் சிறை,
சாதரூபம் என்பவை பொன்னின்நான்கு வகைகள். இவற்றைச் செம்பொன்,
கரும்பொன்,  பசும்பொன், வெண்பொன்என்பர்.                  76-4