குகனது அறிமுகம் கலிவிருத்தம் 1953. | ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான், தூய கங்கைத் துறை விடும் தொன்மையான், காயும் வில்லினன், கல் திரள் தோளினான். |
ஆய காலையின் - அந் நேரத்தில்; ஆயிரம் அம்பிக்கு நாயகன்- ஆயிரம்நாவாய்களுக்குத் தலைவனும்; தூய கங்கைத் துறை விடும் தொன்மையான் - தூய்மையானகங்கைத் கரையில் நெடுங்காலமாகப் படகு விடும் தன்மை உடையவனும்; காயும் வில்லினன் -பகைவரைச் சீறி அழிக்கும் வில்லுடையவனும்; கல் திரள் தோளினாள் - மலை போல் திரண்ட தோளை உடையவனும் ஆகிய; போர் - போர்த் தொழிலில் வல்ல; குகன் எனும்நாமத்தான் - குகன் என்ற பெயரை உடையவன். குளகச் செய்யுள். ‘இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்’ (1961) என்னும் செய்யுள்அடியிற் சென்று முடியும். இனி வரும் செய்யுள்களில் குகனைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்கிறார்கவிஞர். 1 |