1956.காழம் இட்ட குறங்கினன், கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான், அரை
தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான்.

     காழம் இட்ட குறங்கினன் - காழம் என்னும் ஒருவகை  உடையை
இறுக அணிந்த துடையைஉடையவன்; கங்கையின் ஆழம் இட்ட
நெடுமையினான் -
கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்தபெருமை
படைத்தவன்;  அரை தாழ விட்ட செந்தோலன் - இடுப்பிலிருந்து கீழே
தொங்கவிடப்பட்ட சிவந்த வார்ப்பட்டை  உடையவன்;  தயங்குற -
விளங்கும்படி;  சூழவிட்ட - இடுப்பைச் சுற்றிக் கட்டிய;  தொடு புலி
வாலினான் -
ஒன்றோடொன்றசேர்த்துக் கட்டப் பெற்ற புவி வாலை
உடையவன்.

     காழம் எனப்து இடுப்பிலிருந்து தொடைவரை அணியும் சிறிய
காற்சட்டை.  காழகம் எனவும்வரும. அரையிலிருந்து  தொங்கவிடப்பெற்ற
செந்திறத் தோலாகிய வார்ப் பட்டை அம்பு முதலியனதீட்டுதற்காம் என்க.
புலிவால்களை ஒன்றோடொன்று பிணைத்து இடுப்பைச் சுற்றிக்
கட்டியுள்ளான்.                                                 4