1977. | செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும் வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஓர் அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி, செய்ய வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. |
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை - செக்கச் செவேல் என்று சேற்றில்தோன்றிய செந்தாமரை மலர்; தேரில் தோன்றும் - ஒற்றைச் சக்கரத் தேரில்உதயமான; வெஞ்சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த - வெம்மையான கதிர்களைஉடைய சூரியனது வடிவத்தைப் பார்த்து மலர்ந்தன; செய்ய - சிவந்ததாகிய; வஞ்சி -வஞ்சிக் கொடிபோல்பவளாகிய சீதையினிடத்தில்; வாழ் வதனம் என்னும் தாமரை- உள்ளமுகம் என்னும் தாமரை; வேறு ஓர் அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி - செஞ்சூரியனில் மாறுபட்டு வேறொன்றான கருஞாயிற்றை ஒத்த இராமனைப் பார்த்து; மலர்ந்தது -மலர்ந்து விளங்கியது. கருமை நிறம் உடைய இராமனை அஞ்சன ஞாயிறு என்றார். தடாகத் தாமரை செஞ்ஞாயிறு கண்டுமலர்ந்தது; முகத் தாமரை கருஞாயிறு கண்டு மலர்ந்தது. 25 |