2002. | ‘பாண், இள மிஞிறு ஆக, படு மழை பணை ஆக, நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல், “பூணியல்! நின சாயல் பொலிவது பல கண்ணின் காணிய” எனல் ஆகும், களி மயில் - இவை காணாய்! |
பூண்இயல் - அணிகளை இயல்பாக உடையவளே!; களிமயில் - களிப்புநிறைந்த மயில்கள்; இள மிஞிறுபாண் ஆக - இளைய வண்டு பாட்டுப் பாடும் பாணன்ஆகவும்; படு மழை- பொழிகின்ற மழையின் ஒலி; பணை ஆக - பறை ஒலியாகவும்கொண்டு; நாணின - வெட்கமுற்றனவாய்; தொகுபீலி - சுருக்கிக் கொண்ட தம் தோகைகளை; கோலின -விரித்து வளைத்தனவாய்; நடம்ஆடல் - நடனம் ஆடுதல்; நின சாயல் பொலிவது -உன்னுடைய சாயல் தம்மிடத்தேவிளங்குவதை; பல கண்ணில் - தம்முடைய தோகையில் உள்ளபலகண்களால்; காணிய- காண்பதற்கு; எனல் ஆகும் -என்று சொல்லாம்படியுள்ள; இவை - இக் காட்சிகளை; காணாய் -. தோகை சுருங்கி இருக்குங்கால் அதில் உள்ள கண்கள் வெளித் தோன்றா; விரித்தவழிகண்கள் தோன்றும் ஆதலின், ஆடும் மயில் தம் தோகைக் கண்களால் பிராட்டியின் சாயல்தம்மிடத்தே பொருந்தியுள்ளமையைப் பார்ப்பது போலும் என்று கூறினார். 4 |