2004. | ‘நெய்ஞ் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக் கைஞ் ஞிறை நிமிர், கண்ணாய்! - கருதின இனம் என்றே மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு, நின் விழி கண்டு, |
| மஞ்ஞையும் மட மானும் வருவன பல - காணாய்! |
நெய்ஞ்ஞிறை நெடு வேலின் நிறம் உறுதிறம் முற்றி - நெய் பூசப்பெற்று நிரம்பியநீண்ட வேற்படையின் தன்மை நிரம்பிய ஆற்றல் பொருந்தி; கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்!- கை அளவில் அடங்காது மேற்பட்டுச் செல்கின்ற கண்ணை உடையவளே!; மஞ்ஞையும் மடமானும்- மயிலும் இளைய மானும்; மெய்ஞ் ஞிறை விரிசாயல் கண்டும் - உன் மேனியில் நிரம்பியுள்ள விரிந்த மென்மைத் தன்மையைப் பார்த்தும்; நின் விழி கண்டும்- உன் கண்களைப் பார்த்தும்; இனம் என்று கருதின - உன்னைத் தம் இனம் என்றுகருதினவாய்; வருவன பல - வருகின்றன வாகிய பலவற்றை; காணாய் -. நிறை - ஞிறை. போலி; தம் சாயல் சீதையிடம் இருத்தலால் மயில்கள் இனம் என்றுவந்தன. விழியைக் கண்டு தன் இனமான மான் என்று கருதி மான்கள் வந்தன. நிறம் உறு திறம் -மார்பை ஊடுருவிச் செல்லும் பேராற்றல் எனலும் ஆம். இங்கு ஆடவர்தம் நெஞ்சத்தை ஊடுருவிச் செல்லும் ஆற்றலாம். என்றே -ஏகாரம் தேற்றம். 6 |