கலிநிலைத்துறை  

2028.‘நிறையும், நீர், மலர், நெடுங் கனி,
     கிழங்கு, காய் கிடந்த’
குறையும் தீயவை; தூயவை
     குறைவு இல; எம்மோடு
உறையும் இவ் வழி, ஒருங்கினில்
     உயர் தவம் முயல்வார்க்கு
இறையும், ஈது அலாது இனியது ஓர்
     இடம் அரிது; இன்னும்,

     ‘நிறையும்நீர் - நீர் நிரம்பியுள்ளது; மலர், நெடுங்களி, கிழங்கு,
காய் கிடந்த -
பூக்களும், பெரும்பழங்களும், கிழங்குகளும், காய்களும்
உள்ளன; தீயவை குறையும் - தீவினைகளும் போய்விடும்; தூயவை
குறைவு இல -
நற் செயல்களுக்குயாதொரு குறைவும் இல்லை; இவ்வழி-
இவ்விடத்தில்;  எம்மொடு உறையும் -எம்மோடுநீங்களும் வசியுங்கள்;
ஒருங்கினில் உயர்தவம் முயல்வார்க்கு -மன ஒருமையால் மிக உயர்ந்த
தவத்தைச் செய்கிறவர்களுக்கு;  இறையும் -தங்குதற்கு இடம்; ஈது அலாது
இனியது  ஓர் இடம் அரிது’ - இது வல்லாமல் இனிமையான வேறு ஓர்
இடம் கிடைத்தல்அரிதாகும்; இன்னும் - மேலும்....

     தவம் செய்வார்க்கு  உணவு வகைகள், மலர்,  நீர் முதலியன
நிரம்பியிருத்தல்,தீச்செயல்களுக்கு  இடமின்மை,  நற்செயல் விளைதல்,
மன ஒருமைக்கு வேண்டிய அமைதிச் சூழல்இத்தனையும் கூடியிருத்தலின்
இது மிகச் சிறந்த இடம் என்றான் முனிவன். இறுத்தல் - தங்குதல்; இணை -
தங்கும் இடம்.                                                 30