2039. | குழுமி மேகங்கள் குமுறின, குளிர் துளி கொணர்ந்த; முழு வில் வேடரும், முனிவரின் முனிகிலர், உயிரை; தழுவி நின்றன, பசி இல, பகை இல், தணிந்த, உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட; |
மேகங்கள் குழுமிக் குமுறின - மேகங்கள் கூட்டமாய் வந்து சப்தமிட்டு; குளிர்துளி கொணர்ந்த - குளிர்ந்த மழைத்துளியை மண்ணுக்குக் கொண்டு தந்தன; முழுவில்வேடரும் - இலக்கணத்தால் நிரம்பிய வில்லை உடைய வேடர்களும்; முனிவரின் உயிரைமுனிகிலர் - தவத்தோர்களின் உயிரைக் கோபித்துத் தீங்கு செய்தாரில்லை; மான்இளங் கன்றுகள் - மானின் இளைய குட்டிகள்; தழுவி நின்றன. பசி இல, பகை இல தணிந்தஉழுவையின் முலை- தம்மைத் தழுவி நின்றவனாகிய பசியும் பகையும் இல்லாது தணிந்த புலிகளின்முலையை; உண்ட - உண்டன. பகை நீங்கி உயிரினங்கள் நட்பாயின என்பதாம். 41 |