2040.கல் அளைக் கிடந்து அகடு வெந்து
     அயர்கின்ற கதழ் பாம்பு,
அல்லல் உற்றில, அலை புனல்
     கிடந்தன அனைய;
வல்லை உற்ற வேய், புற்றொடும்
     எரிவன, மணி வாழ்
புல் எயிற்று இளங் கன்னியர்
     தோள் எனப் பொலிந்த;

     கல் அளைக்கிடந்து - மலைக்குகையிலே தங்கி;  அகடு வெந்து -
வயிறுதீய்ந்து; அயர்கின்ற - சோர்கின்ற; கதழ் பாம்பு - சீற்றம் உடைய
பாம்பு; அல்லல் உற்றில - (இப்பொழுது) துன்பம் அடைய வில்லை;
அலை புனல் கிடந்தன அனைய- அலை வீசும் தண்ணீரில் கிடப்பதைப்
போல உள்ளன வாயின; வல்லை உற்ற வேய் -பெருங்காட்டில் முளைத்த
மூங்கில்; புற்றொடும் எரிவன - தாம் இருந்த புற்றோடும்எரிந்து போயின
(இப்போது);  மணி வாழ் புல் எயிற்று இளம் கன்னியர் - முத்துமணி
வாழ்கின்ற சிறிய பற்களை உடைய வேட்டுவப் பெண்களின்; தோள் எனப்
பொலிந்த -
தோள்களைப் போலச் செழிப்புடைய வாயின.

     வல்லை - காடு .  மணி என்பது  இங்கு முத்து.  முத்துப் போல்
தங்கியுள்ள பற்களை உடைய எனஉரைக்க.                         42