2049. | ‘வடம் கொள் பூண் முலை மட மயிலே! மதக் கதமா அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமைதொறும் தொடக்கி, தடங்கள்தோறும் நின்று ஆடுவ, தண்டலை அயோத்தி நுடங்கு மாளிகைத் துகிற்கொடி நிகர்ப்பன - நோக்காய்! |
வடம்கொண் பூண் முலை மயிலே! - முத்துவடமாகக் கொள்ளப் பெற்ற அணியை அணிந்ததனங்களையுடைய இளைய மயில் போன்றவளே!; மதம்கத மா - மதம் பிடித்த சீற்றமுள்ள யானைகள்; அடங்குபேழ் வயிற்றுஅரவு உரி - உள்ளே அடங்கிய பெரிய வயிற்றை உடைய மலைப்பாம்புகள் உரித்த தோல்கள்;தடங்கள் தோறும்- மலையின் தாழ் வரைகளில் எல்லாம் உள்ள; அமைதொறும் -மூங்கில்கள்தோறும்; தொடக்கி - பிணித்து; நின்றுஆடுவ - அங்கேயேஇருந்து ஆடுகின்றன; தண்டலை அயோத்தி - சோலை சூழ்ந்த அயோத்தி மாநகரத்தில்; நுடங்கு - ஆடுகின்ற; மாளிகைத்துகில் கொடி நிகர்ப்பன - மாளிகைகள் மேல்கட்டப்பெற்ற வெண்மையான நிறமுள்ள துணிக் கொடிகளை ஒத்துள்ளன; நோக்காய் -காண்பாயாக. யானைகளையும் விழுங்கும் வயிற்றை உடைய மலைப்பாம்புகள் உரித்த தோல்கள் மிகப்பெரிதாக இருக்கும் ஆதலால், அவை துகில் கொடிகளை ஒத்துள்ளன என்றாராம்- ‘குஞ்சரம் கோள்இழைக்கும் பாம்பு’ (திருக்கோவை யார். 21.) 4 |