2053. | ‘தொட்ட வார் சுனை, சுடர் ஒளி மணியொடும் தூவி விட்ட சென்றன, விடா மத மழை அன வேழம் வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன, வயங்கும் பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன - பாராய்! |
தொட்ட - (யானை) கைக்கொண்ட; வார்சுனை - நீண்ட சுனை நீர்; சுடர் ஒளி மணியொடும் தூவி விட்ட சென்றன- (தம்மேல்) தூவிவிட்ட ஒளி மிக்கமணிகளொடும் சென்றனவாகிய; விடா மத மழை அன வேழம் - விடாத மதநீர்ப் பெருக்கால்மழையோ எனக் கருதத் தக்க யானைகள்; வட்ட - பாறை வட்டத்தில் உள்ள; வேங்கையின் மலரொடும் ததைந்தன - வேங்கைப் பூவின் பொன்னிற மலர்களொடும் கூடி நெருங்கியமையால்; வயங்கும் - விளங்கும்; பட்டம் - பொன்னாலும் மணியாலும்இயன்ற பட்டம்; நெற்றியில் சுற்றிய போல்வன - நெற்றியில் சுற்றப்பட்டனபோல்வனவாய் உள்ளன; பாராய் - பார்ப்பாயாக. கனையின்கண் ஆடிய யானைகள் சுனை நீர் தூவிய மணிகளைத் தம் நெற்றியில் கொண்டன; பின்னர்ப் பாறை வட்டத்தில் உள்ள பொன்னிறமான வேங்கை மலர்கள் அந்நெற்றியில்நெருங்கிச் சேர்ந்தன. அதனால் நெற்றிப் பட்டம் அணிந்தவை போலத் தோன்றின என்றது தற்குறிப்பேற்றவணியாம். 8 |