2062. | ‘வில் கொள் வாள் நுதல், விளங்கு இழை, இளந் தளிர்க் கொழுந்தே! எல் கொள் மால் வரை உம்பரின், இரும் புனம் காக்கும் கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக் கற்கள், வானிடை மீன் என வீழ்வன - காணாய்.! |
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை, இளம் தளிர்க் கொழுந்தே! - வில்லாகியபுருவத்தைக் கொண்ட ஒளிபடைத்த நெற்றியையும், விளங்கிய அணிகலன்களையும் உடைய, இளையதளிரின் கொழுந்து போன்றவளே!; எல் கொள் மால் வரை உம்பரின் - சூரியனைக்கொண்ட பெரிய மலையின் உச்சியில்; இரும் புனம் காக்கும்- பெரிய தினைப்புனத்தைக் காக்கின்ற; கொல்கொள் வேல் கணார் - கொலைத்தெரிழில் கொண்ட வேல்போன்ற கண்களை உடையவர்களாய குறமகளிர்; குரீஇ இனத்து எறி - (தினையைக் கவரவருகின்ற) குருவிக் கூட்டத்தின்மேல் வீசி எறிகின்ற; குருவிந்தக் கற்கள் -(செந்நிறம் உடைய) குருவிந்த மணிக் கற்கள்; வானிடை - ஆகாயத்தில்; மீன் என - நட்சத்திரம் போல; வீழ்வன - விழுவனவற்றை; காணாய் -. குருவிந்தம் - ஒருவகை மாணிக்கக் கல்; செந்நிறம் உடையது. “பதுமமும் நீலமும் விந்தமும்படிதமும்” என்ற சிலப்பதிகார (மதுரைக். ஊர்காண். 186 -7.) அடிகளுக்கு, ‘விந்தம் -குருவிந்தம்’ இரத்தவிந்து என்பதும் அது;...... ‘திலகமுலோத்திரம் செம்பருத்திப்பூக்களின்மலர் குன்றி முயலுதிரமமே, சிந்துரம் குக்கில் கண் என எட்டும், எண்ணிய குருவிந்தம் கண்ணியநிறமே’ என்ற அடியார்க்கு நல்லார் உரையானும் உணரலாம். 17 |