2064.‘நானம், நாள்மலர், நறை, அகில்,
     நாவி, தேன், நாறும்
சோனை வார் குழற் சுமை பொறாது
     இறும் இடைத் தோகாய்!
வான யாறு மீன் மலர்ந்தன
     எனப் புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி
     இமைப்பன - காணாய்!

     நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை
வார் குழல்சுமை பொறாது -
புழுகு, அன்றலர்ந்த மலர், மணப் பொருள்,
அகிற்புகை, கத்தூரி, தேன்இவற்றைப் பெற்று மணம் வீசும் திரண்ட நீண்ட
கூந்தல் பாரத்தைத் தாங்க மாட்டாமல்;  இறும் இடைத்தோகாய் -
ஓடிகின்ற இடையினை உடைய மயில் போன்றவளே!; வான யாறு - வான
வழியில்;  மின் மலர்ந்து என - நட்சத்திரங்கள் தோன்றின என்னும்படி;
புனல் வறந்த கான யாறுகள் - நீர் வற்றிப் போன காட்ாறுகளில்;  கதிர்
மணி இமைப்பன-
ஒளியுடைய மணிகள் விட்டு விளங்குகின்றவற்றை;
காணாய் -.

     நானம் முதலியன கூந்தலுக்கு ஊட்டும் மண விசேடமாம். வான யாறு-
தேவகங்கை என உரைத்து அதில் வண்ண மீன்கள் போல எனலும் ஆம். 19