2068. | ‘அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது எடுத்து நம்தமக்கு இயம்புவ எனக். கரிந்து இருண்ட தொடுத்த மாதவிச் சூழலில், சூர் அரமகளிர் படுத்து வைகிய பல்லவ சயனங்கள் - பாராய்! |
தொடுத்தமாதவிச் சூழலில் - அடர்த்தியாக உள்ள குருக்கத்திக் கொடியால் ஆகியபந்தரில்; சூர் அரமகளிர் படுத்து வைகிய- (தலைவரைப் பிரிந்த) தெய்வத்தன்மை உடையஅரமகளிர் உறங்கியனவும்; அன்பரைஅடுத்த பல்பகல் பிரிந்தவர் என்பது நம்தமக்கு எடுத்து இயம்புவது என- தம் இனிய காதலரைத் தொடர்ந்து பற்பல நாள்கள் பிரிந்தவர்கள் என்பதனை நமக்கு எடுத்துச்சொல்லுவது போல; கரிந்து இருண்ட - (பிரிவினால் ஆகிய விரகத் தீயால்) தீய்ந்துஇருள் நிறமாகிய; பல்லவச் சயனங்கள் - தளிர்ப் படுக்கைகளை; பாராய் -. மாதவி - குருக்கத்தி (ஒருவகைக் கொடி); தலைவரைப் பிரிந்த மகளிர் உடல் வெப்பத்தைஆற்ற மென்மையான தளிர்ப் படுக்கையில் படுத்தனர். பிரிவு நீண்ட நாள் ஆதலின்அப்படுக்கைகளும் கரிந்து தீய்ந்துள்ளன என்றதாம். 23 |